Thursday, September 1, 2011

தேனி எம். சுப்பிரமணிக்கு விருது - வாழ்த்து!


தேனி, தென்தேன் தமிழ்ச்சங்கம் சார்பில் எஸ்.எஸ்.பொன்முடி எழுதிய “பசியின் நிறம் வெள்ளை” நூல் அறிமுக விழா மற்றும் கலை, இலக்கியத் தளங்களில் சிறப்புப் பங்களிப்பு செய்தவர்களுக்கான பாராட்டு விழா போன்றவை கடந்த 29-08-2011 அன்று தேனி இண்டர்நேசனல் ஹோட்டல் கூட்ட அரங்கில் நடைபெற்றது. இவ்விழாவில் முத்துக்கமலம் இணைய இதழின் ஆசிரியரும், நண்பருமான தேனி.எம்.சுப்பிரமணி இணைய இதழியல் துறையில் சிறப்பான பங்களிப்பு செய்தமைக்காக சாகித்ய அகாதமி விருது பெற்ற பிரபல எழுத்தாளர் பிரபஞ்சன், பரிசு மற்றும் பாராட்டுச் சான்றிதழ்களை வழங்கினார்.

இணைய இதழியல் துறையில் ஏற்கனவே தமிழ்நாடு அரசு பொது நூலகத் துறையின் தேனி மாவட்ட நூலகம் வழங்கிய கலை - இலக்கிய சாதனையாளர் விருது, சி. பா. ஆதித்தனார் இதழியல் கழகம் வழங்கிய “தமிழ்த்திணை” விருது ஆகியவற்றின் வரிசையில் இந்த விருதும் சேர்ந்திருக்கிறது.

தேனி.எம்.சுப்பிரமணி மென்மேலும் பல சிறப்புகளைப் பெற நாத்து வழியாக வாழ்த்துகிறோம்.

1 comment:

Post a Comment